மதுரை, ஏப்.25- மதுரை ஆட்சியர் அனீஷ் சேகரை முற்கையிட்ட காவிக் கூட்டத்தை (பாஜக) மக்கள் வசைமாரி பொழிந்தனர். ஒவ்வொரு திங்களன்றும் மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் தமது அலுவலகத்தில் மக்க ளைச் சந்தித்து குறைதீர் மனுக் களைப் பெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் திங்க ளன்று மாற்றுத்திறனாளிகளி டம் மனுக்களைப் பெற ஆட்சி யர் சென்றார். அப்போது, அங்கி ருந்த பாஜக மதுர மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை யில் ஒரு கூட்டம் மோடி படம், சுத்தியல், ஆணியோடு ஆட்சி யரை முற்றுகையிட்டு பிரதமர் மோடி படத்தை அலுவலகத் தில் மாற்ற வேண்டுமெனக் கூறி னர். பாஜகவினர் தங்களது கோரிக்கையை வேறொரு நாளில் கூட ஆட்சியரைச் சந் தித்து கூறியிருக்கலாம். குறை தீர் நாளன்று சென்றதால் மாற் றுத்திறனாளிகள் மனுக்களை கொடுக்க முடியாமலும், மனுக்களை கொடுத்துவிட்டு செல்லமுடியாமலும் தவிக்கி றோம் என புலம்பினர் மாற்றுத் திறனாளிகள். இதைப் பார்த்த மற்ற மனு தாரர்கள், தினம்தோறும் பெட் ரோல், டீசல் விலை ஏறுகிறது. லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விட் டது. நூறு நாள் வேலைக்கான நிதியை மோடி அரசு வெட்டிச் சுருக்கிவிட்டது. தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்கிறது. இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. அதற்காக மனுக் கொடுக்க வந்திருந்தால் கூட பரவாயில்லை. மோடி படத்தை மாட்டுவது தான் இவர்களுக்கு பிரச்சனை என வசைமாறி பொழிந்தனர். பலர் பாஜகவின் “வேடிக்கை நிகழ்ச்சியை” பார்த்து தங் களை அறியாமல் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சென்றனர். பாஜகவினர் இடத்தைக் காலி செய்தததும் ஆட்சியர் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண் டார்.